வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள பயிற்சி வகுப்பாம்.. கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
Recommended Video
சென்னை: இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக வெளியாகியுள்ள விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஆகஸ்ட் 26ல் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூரில், கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி கிருத்திகாவுக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்த்து சர்ச்சை ஏற்பட்டது. கார்த்திகேயன் நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். தனது நண்பரோடு சேர்ந்து இயற்கை முறையில் பேறுகாலம் பார்த்தபோது, கிருத்திகா பலியானார்.
பிரசவம் பார்த்த மூவர் மீதும் முறையற்ற வகையில் பிரசவம் பார்த்து உயிராபத்தை உண்டாக்கியதாக திருப்பூர் மாநகர சுகாதார அலுவலர் பூபதி சார்பில் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dear @chennaipolice_ according to health minister announcement home delivery of babies is illegal. Recently a woman in Tirupur died due to this. Please take action to stop this. pic.twitter.com/TESbGYonKX
— Neander Selvan (@happyselvan) August 1, 2018
இந்த நிலையில், இனிய சுகப்பிரசவம் என்ற பெயரில், ஆகஸ்ட் 26ம் தேதி பயிற்சி அளிக்கப்படுவதாக ஒரு விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அனுமதி இலவசம் என ஆசைகாட்டுகிறது அந்த விளம்பரம்.
இதுகுறித்து நமது வெப்சைட்டில் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம். தகவல் அறிந்த கோவை மாவட்ட நிர்வாகம், அந்த பயிற்சி முகாமை நடத்த கூடாது என ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.