என்னாதான் சொல்லுங்க... நம்ம உள்ளூர் "ஆட்டக்காரனை" அடிச்சுக்க முடியாதுங்க!
பாம்பு பிடிப்பதில் வெளிநாட்டினர் படும் பாட்டையும், நமது உள்ளூர் மக்கள் லாவகமாக பிடிப்பதையும் இந்த வீடியோவில் பாருங்களேன்.
Recommended Video
சென்னை: என்னதான் வெளிநாட்டினர் பல்வேறு துறைகளில் உயர்ந்தாலும் பாம்பு பிடிப்பதில் நமது உள்ளூர் ஆட்டக்காரனை அடிச்சிக்கவே முடியாது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வெளிநாடுகளில் விவசாயம் செய்வது, வீடு கட்டுவது, காய்கறிகளை பறிப்பது, காய்களை வெட்டுவது என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்துக்கும் புது வகையான மெஷின்கள் வந்துவிட்டன.
இதுமட்டுமல்ல ஏராளமான விஷயங்களில் வெளிநாட்டினர் பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாம்பு பிடிக்க ஒரு சிங்கப்பூர்க்காரர் படாதபாடுபடுகிறார்.
ஒரு பெரிய பாம்பு ஒன்று ஒரு பூங்கா போன்ற இடத்தில் வந்துவிட்டது. அதை பிடிக்க அங்குள்ள அதிகாரிகள் கோணிப்பையை கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு பிடிக்கின்றனர்.
ஆனால் என்னதான் சொன்னாலும், பாம்பு பிடிப்பதில் நம்ம ஊர்காரர்களை யாரும் மிஞ்ச முடியாது. மற்றொரு வீடியோ ஒரு பாம்பை அலேக்காக எடுத்து லுங்கியில் மடித்துக் கொண்டு செல்கிறார் நம்மூர் இளைஞர் ஒருவர். என்னதான் சொல்லுங்க... நம்ம உள்ளூர் ஆட்டக்காரனை யாராலும் அடிச்சிக்க முடியாது... அடிச்சிக்க முடியாது...