தலித் அரசியல் அல்ல... தமிழ் சமூகத்தின் அரசியல்.....
கேள்வி: கபாலியின் அடிநாதமான தலித் அரசியலும், வசனங்களும் பேசுவதற்காக ரஜினியை ஒப்புக்கொள்ள வைக்க நீங்கள் எப்படியெல்லாம் முயன்றீர்கள்?
பதில்: அவர் மெட்ராஸ் பார்த்துத்தான் என்னை அழைத்தார். மெட்ராஸின் அரசியல் அவருக்குப் புரிந்திருந்தது. கபாலி தலித் சமூகத்தின் அரசியலாக நான் நினைக்கவில்லை.
தமிழ்ச் சமூகத்தின் அரசியல்தான் இது. தமிழர்களே தமிழர்களுக்குப் பிரச்சனையாக இருப்பதைப் பேசுகிறோம். அதைப் புரிந்துகொண்டார் ரஜினி.
கேள்வி: சில எதிர்மறை விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: நாம் சிலர் மீது நம்பிக்கை வைப்போம். அவர்களே இப்படியெல்லாம் பேசும்போது என்னதான் செய்வது? அவர்கள் ஏன் இப்படி யோசிக்கிறார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
இதற்கு நான் பதில் சொல்லவேண்டியதில்லை. என் மீது அன்பு கொண்ட பலரும் பதில் சொல்கிறார்கள். நான் சரியாகத்தான் வேலை செய்கிறேன் என்று திருப்தியை அளிக்கிறது இது.
யாரிடம் விவாதிக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ அந்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். இந்த விவாதங்களினால்தான் இந்தக் கோபம் வருகிறது. கட்டுப்படுத்த முடியாத, மறுக்கவே முடியாத ஒரு படைப்பைத் தருகையில்தான் இப்படியான கோபங்கள் வெளிப்படும்.
இவ்வாறு ரஞ்சித் கூறியுள்ளார்.