பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வில் குளறுபடி.. மாணவர்கள் அதிர்ச்சி
பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது தமிழகம் முழுக்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் முதல் தாள் தேர்வு மட்டும் நடந்து முடிந்து இருக்கிறது.
இந்த நிலையில் இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. ஆனால் தமிழ் முதல்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் தமிழ் 2ஆம் தாளிலும் கேட்கப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சைக்கு படித்துவிட்டு வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் ஆசிரியர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.
இந்த நிலையில் உடனடியாக மறுதேர்வு வைக்க வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். அதன்படி ஆசிரியர்களும், மாணவர்களும் மறுதேர்வு நடந்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.