For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”டாக்டரானாலும் வரதட்சணை கொடுக்கனும்” – வரதட்சணைப் புகாரில் கணவன் கைது

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் மனைவியிடம் வரதட்சணைக்கேட்டு கொடுமை செய்த மருத்துவரான கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை புலியகுளம் ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் லூர்து ஆரோக்கியகுமார். இவரது மகள் அபிநயா . ஹோமியோபதி மருத்துவரான இவர் கோவை இராமநாதபுரம் போலீஸில் சனிக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது,

"எனக்கும் கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் பெலிக்ஸ் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூபாய் 2 லட்சம் மற்றும் 70 பவுன் நகைகள் என்னுடைய பெற்றோர்கள் மூலம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டது.

தற்சமயம் எனது கணாவர் ஜார்ஜ் பெலிக்ஸ் சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் ஹோமி யோபதி கிளினிக் வைத்துள்ளார். இந்த கிளினிக்கை விரிவாக்கம் செய்வதற்காக எனது தந்தை வீட்டிலிருந்து ரூபாய் 10 லட்சம் வாங்கி வருமாறு ஜார்ஜ் பெலிக்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில நாள்களாக என்னை துன்புறுத்தி வருகின்றனர்" என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் ஜார்ஜ் பெலிக்ஸ், அவரது தந்தை ஜெயக்குமார், தாயார் லில்லி மற்றும் உறவினர்கள் உள்பட 9 பேர் மீது வரதட்சிணைக் கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இவ்வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸார் வசம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Doctor Husband cruelty his wife for dowry. Police arrested him and his family for this activity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X