For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டிலிருந்து திரும்பிய நாளில் உருட்டு கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து அரங்கேறும் கள்ளக்காதல் கொடுமைகள்- வீடியோ

    சென்னை: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் உருட்டு கட்டையால் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார்.

    கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசாமி. இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    Husband arrested, for killing wife

    ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ராமசாமி வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றார். கடந்த மாதம் ராமசாமி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அன்றே, உருட்டுக்கட்டையால் கவுசல்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர். இருப்பினும் மேல் சிகிச்சைக்காக கவுசல்யா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பலியானார்.

    இதையடுத்து ராமசாமி மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராமசாமியின் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்த அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, கவுசல்யாவின் நடத்தை குறித்து புகார் தெரிவித்ததாகவும், இதையடுத்து அவர் உடனே வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவுடன் மனைவியிடம் சண்டை போட்டு இதுகுறித்து சண்டைப் போட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

    English summary
    Husband has been arrested, for killing wife on his return day from abroad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X