For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுராத்திரி.. காட்டுப்பகுதி.. மனைவியுடன் மற்றொருவர்.. கணவன் செய்த வெறிச்செயல்!

மனைவி மற்றும் கள்ளக்காதலனை கணவன் கொன்று சரணடைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதலால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்- வீடியோ

    தூத்துக்குடி: கடைசி வரைக்கும் இந்த கள்ளக்காதலை மட்டும் ஒழிக்கவே முடியாது போலிருக்கு. இதனால் இன்னும் எத்தனை கொலைகளும், தலைகளும் உருண்டு விழ போகிறதோ தெரியவில்லை.

    கோவில்பட்டியை அடுத்துள்ள கிராமம் மும்மலைப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி தங்கமாரியம்மாள். ஹரிகிருஷ்ணன் கட்டிட வேலை பார்த்து வருகிறார். பெரும்பாலும் கேரளாவில்தான் இந்த கட்டிட வேலையை செய்து வருகிறார். அதனால் தன் கிராமத்தில் இவர் இருப்பதே கிடையாது. வேலை விஷயமாக கேரளாவிலேயே இருப்பார்.

    மனைவியை கண்டித்தார்

    மனைவியை கண்டித்தார்

    இதனை சாக்காக பயன்படுத்தி கொண்ட தங்கமாரியம்மாள், அதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். தன் கிராமத்துக்கு வரும்போதெல்லாம் அரசல் புரசலாக மற்றவர்கள் ஹரிகிருஷ்ணனிடம் இந்த முறையற்ற உறவு பற்றி சொன்னார்கள். இது இல்லாமல், ஹரிகிருஷ்ணனே இதை நேரிடையாக பார்த்தார். பின்னர் தன் மனைவியை கூப்பிட்டு , பெருமாளுடன் இனி பேசக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால் தங்கமாரியம்மாள் பெருமாளுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தவே இல்லை.

    கேரளாவில் வெள்ளம்

    கேரளாவில் வெள்ளம்

    இந்நிலையில், கேரளாவில் வெள்ளநீர் பிரச்சனை ஏற்படவும், ஹரிகிருஷ்ணன் கேரளாவுக்கு சென்றுவிட்டார். வெள்ள பாதிப்பில் தாங்கள் கட்டி வரும் கட்டிடங்கள் குறித்து அறிய கேரளாவிலேயே தங்கிவிட்டார். கேரளாவின் பாதிப்பு குறித்து அறிந்த தங்கமாரியம்மாள், இப்போதைக்கு ஹரிகிருஷ்ணன் ஊருக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில் வழக்கம்போல் பெருமாளுடன் ஊர்சுற்ற கிளம்பிவிட்டார்.

    காட்டுப்பகுதியில் மனைவி

    காட்டுப்பகுதியில் மனைவி

    இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் நேற்றிரவு தன் கிராமத்துக்கு வந்தார். வீட்டில் மனைவியை காணோம். வீடும் பூட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் மனைவியை தேட ஆரம்பித்தார். அப்போது ஊரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் மனைவியும் பெருமாளும் ஒன்றாக இருப்பதை கண்டு ஹரிகிருஷ்ணன் ஆத்திரமடைந்தார்.

    போலீசில் சரண்

    போலீசில் சரண்

    இருவரையும் அரிவாளால் அங்கேயே சரமாரியாக வெட்டினார். இதில் இருவருமே சுருண்டு விழுந்து இறந்தனர். கொலை செய்துவிட்ட ஹரிகிருஷ்ணன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி, ஹரிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Husband kills his wife near Thoothukudi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X