For Daily Alerts
Just In
சென்னையில் பயங்கரம்- போதையில் ரகளை செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!
சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள அனுமன் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ். 33 வயதான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரு மனைவி பெயர் தேவி. 25 வயதான இவர் குடிக்கு அடிமையானவர்.
குடித்து விட்டு அலெக்ஸின் பெற்றோருடனும், அக்கம் பக்கத்தினருடனும் தகராறு செய்து வந்துள்ளார் தேவி. இதனால் வேதனையில் இருந்து வந்தார் அலெக்ஸ். நேற்று இரவும் தேவி குடித்து விட்டு தகராறு செய்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய அலெக்ஸ் இதை அறிந்து கடும் கோபமடைந்தார். மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. கணவருடனும் சண்டை போட்டார். இதில் கோபமடைந்த அலெக்ஸ் சரமாரியாக மனைவியை அடித்துள்ளார். அதில் தேவி இறந்து போனார்.
தகவல் அறிந்து திருமுல்லைவாயில் போலீஸார் விரைந்து வந்து அலெக்ஸைக் கைது செய்தனர்.
English summary
A painter killed his wife for clashing with his parents in inebriated condition.