For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலம் அல்ல கடல்.. நாகை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதா?

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இந்த முறை விவசாய நிலத்திற்கு பதில் கடல் பகுதியில் அல்லது கடலுக்கு அருகில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இந்த முறை விவசாய நிலத்திற்கு பதில் கடல் பகுதியில் அல்லது கடலுக்கு அருகில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும். ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும்.

வெளியேறினார்கள்

வெளியேறினார்கள்

முதலில் மீத்தேன் திட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருந்தது. கடும் எதிர்ப்பு காரணமாக இதை நிறுத்தினார்கள். அதன்பின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட இருந்தது. அங்கும் எதிர்ப்பு நிலவி போராட்டம் நடந்ததால் இந்த திட்டம் ஜெம் நிறுவனத்தால் கைவிடப்பட்டது.

[தூத்துக்குடியில் மூடினால் என்ன, நாகையில் திறங்க.. வேதாந்தாவிற்கு ரத்தின கம்பளம் ]

இரண்டு விவசாய நிலம்

இரண்டு விவசாய நிலம்

இந்த இரண்டும் விவசாய நிலம் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். இங்கிருந்த விவசாயிகள்தான் இந்த திட்டத்திற்கு எதிராக கடுமையாக போராடினார்கள். அதன் காரணமாகவே இந்த திட்டம் கைவிடப்பட்டது. விவசாய நிலங்கள் பறிபோய்விடும் என்று போராடினார்கள்.

இப்போது என்ன செய்ய போகிறார்கள்

இப்போது என்ன செய்ய போகிறார்கள்

இந்த நிலையில்தான் தற்போது வேதாந்தா நிறுவனம் இரண்டு இடத்தில் இருந்தும், ஓஎன்ஜிசி ஒரு இடத்தில் இருந்தும் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. ஆனால் இந்த முறை நிலப்பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட போவதில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆம் இந்த முறை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளனராம்.

எப்படி செய்வார்கள்

எப்படி செய்வார்கள்

இதை எப்படி செய்வார்கள் என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால் நிலத்தில் செய்தால் பிரச்சனை எழும் என்று கடல் பகுதிக்கு அருகில் இந்த திட்டத்தை அரங்கேற்ற இருக்கிறார்கள். இதற்காகத்தான் இந்த முறை நாகை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

English summary
Hydrocarbon project in Tamilnadu: Not land, this time it is the sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X