நான் பணம் சம்பாதிக்க படம் இயக்கவில்லை - இயக்குநர் சமுத்திரகனி விளக்கம்: வீடியோ
நான் பணம் சமாதிக்க படம் இயக்கவில்லை. சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான்படம் இயக்குகிறேன் என இயக்குநர் சமுத்திரகனி கரூரில் கூறியுள்ளார்.
கரூர்: என்னைப் போன்ற சில இயக்குநர்கள் சமூகத்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமா இயக்குகிறார்கள். பலர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமா இயக்குகுறார்கள் என இயக்குநர் சமுத்திரகனி கூறியுள்ளார்.
இயக்குநர் சமுத்திரகனியின் தொண்டன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கரூரில் ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து தொண்டன் திரைப்படத்தை சமுத்திரகனி பார்த்தார். அப்ப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரக்கனி,''நான், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், காக்கா முட்டை மணிகண்டன், சீனுராமசாமி போன்ற 15 இயக்குநர்கள் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படம் இயக்குகிறோம்.
ஆனால் சில இயக்குநர்கள் பணம்சமாதிக்க மட்டுமே திரைப்படம் இயக்குகிறார்கள். எனக்கு பணம் சம்பாதிப்பது மட்டும் நோக்கமில்லை'' என கூறினார். சமுத்திரகனியின் சாட்டை, அப்பா ஆகிய படங்கள் இன்றைய பள்ளிக் கல்வியின் அவலநிலையை எடுத்துக் கூறிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.