ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரபர!
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. 75 நாள் சிகிச்சைக்குக் பிறகு அவர் மரணமடைந்தார்.
அவரது உடல் கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மிகப்பெரிய நினைவிடம் கட்ட அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று விசாரணை
இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
தனிப்பட்ட கருத்து
அப்போது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றார்.
உடன்பாடு இல்லை
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தனிப்பட்ட முறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று இந்திரா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். தனிப்பட்ட கருத்துக்கும் சட்டப்பூர்வமான கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது.
சட்டப்படி தீர்ப்பு வழங்குவேன்
தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும், வழக்குகளில் சட்டத்திற்கு உட்பட்டு, வழக்கறிஞர்களின் வாதங்களைப் பொருத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சட்டப்படி தீர்ப்பு வழங்குவேன் என்றும் அவர் கூறினார்.
25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மேலும் வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஹைகோர்ட் தலைமை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் இந்த கருத்து அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.