ஆதங்கத்தை சொன்னால் அடிக்கிறார்கள்.. தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் குமுறல்!
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தமிழிசையிடம் கேள்வி எழுப்பியதற்காக பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் தற்போது பேட்டி அளித்துள்ளார். தன்னுடைய ஆதங்கத்தைதான் சொன்னதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கதீர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தமிழிசையை பார்த்து, சோபியா என்ற மாணவி ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்றார். இது வைரல் ஆனது. அதன்பின், நேற்று எச்.ராஜா நீதிமன்றம் குறித்தும் போலீஸ் குறித்து தவறாக பேசி சிக்கலில் மாட்டினார்.
|
தாக்கினார்கள்
தற்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கதீர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாஜகவினர் அந்த டிரைவரை வலுக்கட்டாயமாக கழுத்தை பிடித்து இழுத்து வெளியே அனுப்பி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.
வருமானம் இல்லை
இந்த நிலையில் தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட அந்த ஆட்டோ ஓட்டுநர் பேட்டி அளித்துள்ளார். அதில் வண்டி வாடகை கொடுக்க கூட பணம் இல்லை என்னிடம். பெட்ரோல் போடவே வருமானம் சரியாக உள்ளது. தினமும் பெட்ரோலுக்கே எல்லா பணமும் செலவாகிறது. இதில் எப்படி குடும்பத்திற்கு பணம் கொடுப்பது. எப்படி வாடகை கொடுப்பது. எப்படி சாப்பிடுவது.
கன்னத்தில் அறைந்தனர்
அதனால்தான் அவரிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்காக பாஜகவினர் என்னை தாக்கினார்கள். என் ஆதங்கத்தைதான் நான் சொன்னேன். அதற்கு போய் பாஜகவினர் என் கன்னத்தில் அறைந்தார்கள் என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய வைரல்
இந்த செய்தி இன்னும் தமிழகத்தில் வைரலாகவில்லை என்றாலும் ஆங்கில ஊடகங்களில் இது பெரிய செய்தியாக மாறியுள்ளது. வடஇந்திய ஊடகங்கள் இந்த செய்தியை பெரிய அளவில் வைத்து விவாதங்கள் நடத்தி வருகிறது. தொடர்ந்து பாஜக கட்சிக்கு அடிமேல் அடி விழுவதால் அந்த கட்சி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.