For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. சாப்ட்வேர் ரெடி.. நித்தியானந்தா அதிரடி!

விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. நித்தியானந்தா

    சென்னை: விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    தற்போது இந்தியாவில் உள்ள சாமியார்கள் நிறைய அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள். அரசியல் விமர்சகர்கள், நதி பாதுகாவலர்கள், பொருளாதார வல்லுநர்கள், நிறுவன அதிபர்கள் என்று.

    அதில் நித்தியானந்தா தற்போது ''அல்காரிதம்'' எழுதும் ''கோடிங்'' ஜாம்பவானாக உருவெடுத்து இருக்கிறார். ஆம் விலங்குகளை பேச வைக்க இவர் சாப்ட்வேர் உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் விளக்கம் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நேற்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    பேச வைக்கிறார்

    இந்த நிலையில்தான் விலங்குகளை பேச வைக்க போவதாக நித்தியானந்தா கூறியுள்ளார். இதை எப்படி செய்ய போகிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதை செய்த பின் மொத்த உலகமும், ஏலியன் முதற்கொண்டு எல்லாம் இவரைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இவர் தெரிவித்துள்ளார்.

     இதற்கு என்று சாப்ட்வேர்

    இதற்கு என்று சாப்ட்வேர்

    மேலும் நித்தியானந்தா இதற்கு என்று சாப்ட்வேர் ஒன்றும் உருவாக்கி இருக்கிறாராம். ஆம், இதை ஏற்கனவே சோதனையும் செய்து பார்த்துவிட்டாராம். இது மிகவும் நன்றாக வேலை செய்கிறது. சில மாற்றங்களுக்கு பின் ஒரு வருடத்தில் விலங்குகளை பேச வைக்க போகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

    அட இது லிஸ்ட்லயே இல்லையே

    அட இது லிஸ்ட்லயே இல்லையே

    மேலும் குரங்குகளுக்கு மிகவும் சரியான குரல்வளையை உருவாக்குவேன். சரியாக மொழியை பேசும் வகையில் புலிக்கும், சிங்கத்திற்கு இந்த மாற்றத்தை செய்வேன். ஒரு வருடத்தில் மாடுகள் நம்மிடம் வந்து அழகாக பேசும் என்றுள்ளார்.

    தமிழ் சமஸ்கிருதம்

    தமிழ் சமஸ்கிருதம்

    இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அண்ணாரின் தமிழ் பாசம்தான். ஆம், இந்த சாப்ட்வேரை அவர் ஆங்கிலத்தில் உருவாக்கவில்லை. இதை அவர் தமிழில் பயன்படுத்த போகிறார். அதாவது அவர் விலங்குகளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பேச வைக்க போவதாக கூறியுள்ளார்.

    English summary
    I can make animals speak, I have software claims Godman Nithyananda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X