For Daily Alerts
Just In
எனக்கு முதல்வராகும் ஆசை என்றுமே இருந்தது இல்லை: வைகோ
தனக்கு முதல்வர் ஆகவேண்டுமென்று ஒரு நாள் கூட ஆசை வந்தது இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை : மதிமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தனக்கு முதல்வர் ஆகவேண்டுமென்ற ஆசை வந்ததே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தான் என்றுமே முதல்வர் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டது கிடையாது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், '1993ல் கட்சி தொடங்கியதில் இருந்து எந்த இடத்திலும் நான் என்னை முன்னிறுத்திக்கொண்டதோ, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதோ கிடையாது. இது என்னுடன் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
அப்படிச் சொல்லி முழக்கமிடக்கூட நான் யாரையும் அனுமதித்தது இல்லை. சில சமயங்களில் முழக்கமிட்டவர்களை நான் அடிக்கவும் செய்திருக்கிறேன். ஆனால், இப்போது எல்லாம் அடிப்பதில்லை' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Comments
English summary
I dont have any interest to become CM says Vaiko. Earlier in a Press meet yesterday, he told that i dont want to become CM and that is not my Idea.
Story first published: Tuesday, February 20, 2018, 10:37 [IST]