பாஜகவில் இணைய திட்டமா? பொன். ராதாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? நடிகர் விவேக் விளக்கம்
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அரசு மரம் நடும் விழாவில்நான் கலந்துகொள்வேனா என்று கேட்பதற்குத்தான் என்னை சந்தித்தார். நானும் கலந்துகொள்வேன் என கூறியுள்ளேன். பாஜகவில் இணைவது குறித்து பேசவில்லை
மதுரை: ரஜினி அரசியலுக்கு வந்தால் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவனாக வரவேற்பேன் என்று ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறிய விவேக், பாஜகவில் நான் இணைய உள்ளேனா? பொன்.ராதா கிருஷ்ணன் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக், ''ரஜினி அரசியலுக்கு வருவதை நான் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக வரவேற்கிறேன். 1996லிருந்து அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.
மத்துய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுடனான சந்திப்பு குறித்து கூறுகையில், பொன்.ராதா கிருஷ்ணன் என் வீடு தேடி வந்து சந்தித்தார். உடனே நான் பாஜகவில் இணைவதாகக் கூறுகிறார்கள்.
உண்மை அதுவல்ல. அரசு சார்பில் மரம் நடும் விழா வைத்தால் கலந்து கொள்வீர்களா என்று கேட்டார். நான் நிச்சயம் கலந்துகொள்வேன் என கூறினேன். இவ்வளவுதான் நடந்தது'' என நடிகர் விவேக் கூறினார்.