ஆமா, எஸ்வி சேகரை நேரில் சந்தித்தேன்... பொன் ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு!
எஸ்வி சேகரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
விழுப்புரம்: எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான் என்றும் அவரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் 4 வாரங்களாக தலைமறைவாக உள்ளார். அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட் எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என தெரிவித்தது.
இருப்பினும் சரண்டர் ஆகாமல் எஸ்வி சேகர் போக்கு காட்டி வருகிறார். தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எஸ்வி சேகரின் அண்ணன் மனைவி என்பதால் போலீஸார் எஸ்வி சேகரை கைது செய்ய மறுப்பதாக புகார் எழுந்தது.
வெளியான வீடியோ
இதனிடையேஅண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் எஸ்வி சேகரும் சந்தித்து பேசிக்கொள்ளும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எஸ்வி சேகரை பார்த்தேன்
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்வி சேகரை பார்த்தேன்.
கட்சி நடவடிக்கை எடுக்கும்
எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான். எஸ்வி சேகரை போஸீஸ்தான் கைது செய்ய வேண்டும். அவர் மீது கட்சிதான் நடவடிக்கை எடுக்கும்.
காவிரி நீர் கிடைக்கும்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.