கண்டிப்பாக நான் அப்பீல் செய்வேன்.. சொல்கிறார் சாமி
சென்னை: கர்நாடக அரசு அப்பீல் செய்கிறதோ இல்லையோ, நான் நிச்சயம் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
Whether Karnataka does or not, I shall be filing an Appeal in SC next month, in time to be taken up when SC reconvenes in early July.
— Subramanian Swamy (@Swamy39) May 17, 2015
இதுதொடர்பாக டிவிட்டரில் போட்டுள்ள ஒரு கருத்தில், கர்நாடக அரசு அப்பீல் செய்கிறதோ இல்லையோ, நான் நிச்சயம் அடுத்த மாதம் அப்பீல் செய்வேன். ஜூலை மாதம் விடுமுறை முடிந்து உச்சநீதிமன்றம் மீண்டும் கூடும்போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் நான் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்வேன் என்று கூறியுள்ளார் சாமி.
MK in his letter to DMK cadres states in Murasoli dated 16.5.2015: "Only Subramanian Swamy...is fighting her even though he is in the BJP"!!
— Subramanian Swamy (@Swamy39) May 17, 2015
கருணாநிதி பாராட்டு
இன்னொரு டிவிட்டில் அவர் கூறுகையில், 16.5.2015 அன்றைய தேதியிட்ட முரசொலி இதழில் திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாஜகவில் இருந்தாலும் கூட ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியம் சாமி மட்டுமே போராடி வருகிறார் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் சாமி.