For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நல்லவர்களைப் போல நடிப்போரின் ஆட்சிதான் நடக்கிறது: சகாயம் ஐஏஎஸ் பொளேர்

தமிழகத்தில் நல்லவர்களைப் போல நடிப்போரின் ஆட்சிதான் நடக்கிறது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சாடியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நல்லவர்களைப் போல நடிப்பவர்களின் ஆட்சியே தற்போது நடைபெறுகிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சாடியுள்ளார்.

சென்னையில் மக்கள் பாதை இயக்கத்தின் 2-வது ஆண்டு விழாவில் சகாயம் நேற்று பேசியதாவது:

எனக்கு இந்தி மொழி தெரியாது என்பது தகுதி குறைவு அல்ல. இந்தி மொழி திணிப்பை எதிர்த்து உயிர்நீத்தோரின் மண் இந்த தமிழகம்.

IAS officer Sagayam slams TN Rulers

அப்படி உயிர்நீத்தோருக்கு மரியாதை செலுத்தவே இந்தியை தவிர்க்கிறேன். தமிழகம் நல்லவர்களின் ஆட்சியைப் பார்த்து இருக்கிறது.

ஆனால் இப்போது நல்லவர்களைப் போல நடிப்பவர்களின் ஆட்சி அல்லவா நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு புரட்சி என்பது தமிழ்நாட்டுக்கான புரட்சி. காளைக்கான போராட்டம் என்பது நாளைக்கான போராட்டம்.

மதுவின் பிடியில் இருந்து இளைஞர்கள் விடுதலையாக வேண்டும். இளைஞர்கள் பேசுவதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்.

இவ்வாறு சகாயம் கூறினார்.

English summary
Senior IAS officer Sagayam slammed that the Tamil Nadu rulers and appreciate to youths protest for Jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X