சிலையை கடத்தி விற்ற டிஎஸ்பி காதர் பாஷா.. விரைவில் கைது.. போலீசார் தீவிரம்
அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சிலையை கடத்திய வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சென்னை: சிலையை கடத்தி பணத்தை பங்கு போட்டுக் கொண்ட வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷா விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஐம்பொன் சிலைகள் 6 கண்டெடுக்கப்பட்டன.
இந்தச் சிலைகள் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரே தாய்லாந்து நாட்டிற்கு கடத்தினர். ஐம்பென் சிலைகள் 6ம் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சிலை கடத்திய 4 போலீசார்
இந்த சிலைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள முகவர் மூலம் தாய்லாந்திற்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து டிஎஸ்பி காதர்பாஷா உள்ளிட்ட 4 போலீசார் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
சம்பவம் அம்பலம்
2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வெளியான உண்மை
இந்தக் கடத்தலில் தொடர்புடைய எஸ்பி சுப்புராஜிடம் போலீசார் நடத்தினர். அதில் சிலை விற்கப்பட்டதும், அதன் மூலம் கிடைத்த பணத்தை டிஎஸ்பி காதர்பாஷாவுடன் பகிர்ந்து கொண்டதையும் ஒப்புக் கொண்டார்.
போலீஸ் அதிகாரிகள் கைது
இதைத் தொடர்ந்து சுப்புராஜ் கைது செய்யப்பட்டார். டிஎஸ்பி காதர்பாஷா உள்ளிட்டவர்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.