எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி?
சென்னை: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது.
முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்னும் சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்கு கோருவார். 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
ஆனால் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் திமுகவுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும். திமுக இந்த வாய்ப்பை நிராகரிக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்படும் நிலை உருவாகும்.
1991-ம் ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உள்ளது.