For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வின் திட்டங்களை செயல்படுத்த முடியாவிடில் பொதுவாழ்க்கையை விட்டு விலகுவோம்.. ஆர்.பி.உதயகுமார்!

ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த முடியாவிட்டால் பொது வாழ்க்கையை விட்டு விலகுவோம் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த முடியாவிட்டால் பொது வாழ்க்கையை விட்டு விலகுவோம் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

If we can not implement Jayalalitha's scheme will get out of public life: RB Udayakumar

இந்நிலையில் மதுரை மேலூரில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பேருந்து கட்டண உயர்வை சேவை மனப்பான்மை உணர்வோடு மக்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்த முடியாவிடில் பொதுவாழ்க்கையை விட்டுகூட விலகுவோம் என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.

English summary
Minister Rb Udayakumar has said in press that If we can not implement Jayalalitha's scheme will get out of public life. He also said People have to take bus fare hike as bitter medicine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X