பச்சமுத்து கைதுக்கு எதிர்ப்பு: ஆதரவாளர்கள் போராட்டம்;சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சேலம்: மருத்துவ கல்லூரி இடங்களை பணத்திற்கு விற்பனை செய்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர். இதனால் ஐஜேகே கட்சியின் தொண்டர்கள் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் தலைவருமான பச்சமுத்து கைது செய்யப்பட்டதை கண்டித்து, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதனிடையே, அம்மம்பாளையம், ஆத்தூர் புறவழிச்சாலை பகுதியில் 2 அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.