இல.கணேசன், எச். ராஜா வேட்பு மனு தாக்கல்!
சென்னை: தமிழக லோக்சபாதேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதேபோல காங்கிரஸ் தரப்பிலும் மனுத்தாக்கல் நடந்துள்ளது.
தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தேசிய தலைவர் இல.கணேசன் இன்று காலை கட்சியினர் புடை சூழ செனறு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதேபோல சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாராமனிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
2 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் தொடங்கியுள்ள மனுத் தாக்கலில் இன்றும் நிறைய சுயேச்சைகள் தமிழகம் முழுவதும் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
நெல்லையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தென்காசி தொகுதி மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் மனுத்தாக்கல் செய்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரியிடம், சதன் திருமலைக்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நெல்லையில் சிவனனைந்த பெருமாளும், தென்காசியில் மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமாரும் போட்டியிடுகின்றனர்.