For Daily Alerts
Just In
”இழுத்துக்கோ, பறிச்சுக்கோ” என்ற நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை- இல.கணேசன்
பாஜக கூட்டணியில் இன்னமும் கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், இன்று முதல் தேமுதிக தலைவர் பிரச்சாரத்தை துவங்குகிறார்.
இந்நிலையில், சென்னையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘'பாஜக தொகுதிப்பங்கீடு தொடர்பாக கட்சித் தலைமையுடன் பேசி முடிவு செய்யப்படும். ராஜ்நாத் சிங், பொன் . ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று டெல்லில் பேசி முக்கிய முடிவை எடுப்பார்கள்.
விஜயகாந்தின் பிரச்சாரத்திற்கும் தொகுதிப்பங்கீடு அறிவிக்கப்படாததற்கும் பிரச்சனை இல்லை. கூட்ட ணிப்பேச்சுவார்த்தை நீடிப்பதை இழுபறியாக எடுத்துக்கொள்ளக்கூடாது'' என்று தெரிவித்தார்.
Comments
English summary
Ila.Ganesan says that coalition talk tug is not a matter between parties. He says that constituency allotment will be decided tomorrow.
Story first published: Friday, March 14, 2014, 11:59 [IST]