For Daily Alerts
Just In
தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி சென்னையில் இன்று மனித சங்கிலிப் போராட்டம்
சென்னை: கர்நாடகத்தில் காவிரிப் போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இளந்தமிழகம் அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. தரமணி - திருவான்மியூர் சந்திப்பில் உள்ள டைடல் பூங்காவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்றும் மாலை 4 மணிக்கு நடைபெறும் இப்போராட்டத்தில் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ராசன் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
போராட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு ராசன் காந்தியை 9489004259 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
English summary
Ilanthamilagam has arranged for a human chain protest in Chennai to seek protection to Karnataka Tamils tomorrow.