இளவரசி மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை
இளவரசி மருமகன் ராஜராஜனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
சென்னை: சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தில் கொடநாடு எஸ்டேட் விவகாரம், சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருந்தவர் ராஜராஜன். கொடநாடு எஸ்டேட் மேலாளராக நடராஜனாக இருந்தாலும் அதை கண்காணித்து வந்தவர் ராஜராஜன்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூருவுக்கும் டெல்லிக்கும் பறந்து கொண்டிருந்தவரும் ராஜராஜன்தான். தற்போது வருமான வரித்துறையில் இளவரசியின் ஒட்டுமொத்த குடும்பமும் சிக்கியுள்ளது.
இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா ஆகியோர் வருமான வரித்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் ஷகிலாவின் கணவர் ராஜராஜனும் இன்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தனர்.
அவரிடம் கொடநாடு தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.