கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கும்பல்!
கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எந்த வித தடையும் இன்றி அமோகமாக நடந்து வருகிறது. இதனால், கூலித்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த வித அச்சமும் இன்றி லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவின் லாட்டரியில் கடைசி மூன்று என்களை மட்டும் வைத்து நடக்கும் இந்த லாட்டரி விற்பனை நாள்தோறும் மாவட்டம் முழுவதும் கோடி கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
திருட்டுதனமாக நடைபெறும் இந்த லாட்டரி விற்பனைக்கு ஏழை கூலித் தொழிலாளிகள் பலரும் அடிமையாகி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்தத் தகவலின் அடிப்படையில் செய்தியாளர்கள் சேலம் சாலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் நடைபெற்ற லாட்டரி விற்பனையை படம்பிடித்தனர்.
இதனைக் கண்ட லாட்டரி விற்பனை கும்பல் நான்கு புறமும் ஓட்டம் பிடித்தது. இதனை அடுத்து இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.