என்னையும் போலீசார் சரமாரியாக தாக்கினர்- வைரலாகும் இமான் அண்ணாச்சி வீடியோ
ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் மீதான போலீஸ் தாக்குதலில் தாமும் பாதிக்கப்பட்டதாக இமான் அண்ணாசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியின் போலீசார் தம்மையும் சராமரியாக தாக்கியதாக இமான் அண்ணாச்சி வாக்குமூலம் தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாத்த மீனவ மக்கள் மீது போலீசார் கொடூர வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறையில் அடைத்தும் உள்ளனர்.
போலீசாரே பல இடங்களில் வன்முறையை நிகழ்த்தினர். சென்னை மீனவர் கிராமங்களில் தீ வைப்பு சம்பவங்களிலும் போலீசார் ஈடுபட்டனர்.
தற்போது போலீசாரின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தும் வீடியோ பதிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு தெரிவித்த தம்மையும் போலீசார் சரமாரியாகத் தாக்கியதாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இமான் அண்ணாச்சி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மாணவர்களை சமாதானப்படுத்துவது தொடர்பாக போலீசாரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே என் மீதும் என் நண்பர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக விவரித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இமான் அண்ணாச்சியின் வீடியோ: