பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தலித்களுக்கு முக்கியத்துவம் தேவை- திருமாவளவன்
பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிகளில் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவி நியமனத்தில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்தா புயல் நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினார். மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரண நிதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டும் கர்நாடகா அரசு கை விரித்து விட்டதாக கூறிய திருமாவளவன், காவிரி மேலாண்மை
வாரியம் அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், துணைவேந்தர் பதவிகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கூறினார்.