தருமபுரி, சேலம், திருச்சி, வேலூரில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் வார்னிங்
தருமபுரி, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தருமபுரி, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இருப்பினும் வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தருமபுரி, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பசலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.