For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மஹிந்திராசிட்டி இன்போஸிஸ் நிறுவனத்தில் ஊழியர் மர்ம மரணம்.. கொலையா?

காஞ்சிபுரம் மகேந்திரா சிட்டியில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: மகேந்திரா சிட்டியில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் அங்குள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளையராஜா என்பது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மகேந்திரா சிட்டி வளாகத்தில் எராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள இன்போஸிஸ் நிறுவன ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

In Kancheepuram Mahendracity campus IT employee body found.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞர் உயிரிழந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஊழியரின் பெயர் இளையராஜா என தெரியவந்துள்ளது. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

In Kancheepuram Mahendracity campus IT employee body found.

ஊழியரின் மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளையராஜா கொலை செய்யப்பட்டாரா? என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சக ஊழியர்களிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இளையராஜாவின் மர்ம மரணம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
In Kancheepuram Mahendracity campus IT employee body found. Employee ilayaraja who was working in infosis is dead now. Police inquiry is it a murder?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X