For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் பலி!

கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்த மழையின் போது, மின்னல் தாக்கி ரம்யா என்ற இளம்பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மெதப்பங்கோடு மலைப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளான குலசேகரம் , திற்பரப்பு, அருமனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது. அப்போது அருமனை அருகே மெதப்பங்கோடு பகுதியை சேர்ந்த வினு என்பவரது மனைவி ரம்யா, வீட்டிலிருந்து வெளியே வந்த போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் விழுந்தார்.

In Kanyakumari young woman died in lightening

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ரம்யாவை தூக்கியபோது இறந்த நிலையில் காணப்பட்டார். இதுதொடர்பாக அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணமடைந்த ரம்யாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்புதிருமணம் செய்தார். அவருக்கு அஜய் என்ற ஆண் குழந்தை உள்ளது.

English summary
In Kanyakumari hilly region an young woman Ramya, died in lightening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X