For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்பத்தகராறு... மனைவியை அடித்தே கொன்ற கொடூரக் கணவன் கைது - வீடியோ

கிருஷ்ணகிரியில் குடும்பத் தகராறில் முனியப்பன் என்பவர் தன் மனைவி அமுதாவை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: குடும்பத் தகராறில் மனைவியை கட்டையால் ஓங்கி அடித்த கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு ஆண்குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அமுதாவுக்கும் முனியப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவதுண்டு.

Recommended Video

    Wife murdered by Husband in Krishnagiri-Oneindia Tamil

    சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே வழக்கம் போல் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முனியப்பன் அருகில் இருந்த கட்டையை எடுத்து ஓங்கி அமுதாவின் தலையில் அடித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அமுதா சில நிமிடங்களிலேயே அதே இடத்தில் உயிரிழந்தார்.

    இந்நிலையில், அமுதா உயிரிழந்ததை உணர்ந்த முனியப்பன் நேராகச் சென்று காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    English summary
    In Krinagiri Rajaji nagar a husband killed her wife in family issue. And he himself surrendered nearby police station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X