For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பிய பந்து கண்டெடுப்பு... திட்டமிட்ட சதியா? - வீடியோ

மதுரை காளவாசலில் உள்ள மசூதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை யார் எறிந்திருப்பார்கள் என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை காளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பந்துகள் இருந்ததைக் கண்டு தொழுகை நடத்த வந்த இஸ்லாமியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை, காளவாசல் பகுதியில் புகழ்பெற்ற மசூதி உள்ளது. இங்கு வழக்கம் போல முஸ்லிம்கள் தொழுகை நடத்த வந்தபோது, இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் இரு பிளாஸ்டிக் பந்துகள் இருந்ததைப் பார்த்துள்ளனர்.

In Madurai Kalavasal mosque, people found explosive

அதனை எடுத்து ஆராய்ந்த போது அதில் வெடிமருந்து நிரப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்லாமியர்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அங்கு, வெடிபொருள் நிபுணர்களுடன் காவல்துறையினர் வந்தனர்.

மேலும், வெடி மருந்து நிபுணரும் காவல்துறையினரும் பள்ளிவாசல் முழுக்க சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வேறெங்கும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கவில்லை. மசூதி வளாகத்துக்குள் வெடிபொருள் நிரப்பிய பந்தை யார் எறிந்து சென்றிருப்பார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In Madurai Kalavasal mosque, people found explosive and police inquiry going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X