குடியிருப்பு பகுதியில் பயங்கர வெடி விபத்து... மக்கள் ஓட்டம்.. மணப்பாறையில் பீதி!
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அங்குள்ள புதுத் தெருவில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு உள்ளது. உரிய அனுமதி பெறாமல் இந்த கிடங்கு செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த கிடங்கில் இன்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் அச்சமின்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வெடிப் பொருட்கள் எரிந்து நாசமாகின.
இதையடுத்து, தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.