For Quick Alerts
For Daily Alerts
Just In
நீத்தார் கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை.... ராமேஸ்வரத்தில் முன்னோருக்குத் திதி!
மகாளய அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் ராமேஸ்வரத்தில் தங்கள் வீட்டு முன்னோருக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
ராமேஸ்வரம்: இன்று மகாளய அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் ராமேஸ்வரம் கடலில் நீராடி, தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து நீத்தார் கடன் செய்தனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று தங்கள் முன்னோருக்கு நீத்தார் கடன் செய்வது வழக்கம். அதன்படி, இன்று மகாளய அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீராடி தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து நீத்தார் கடன் செய்தனர்.
இதனால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. மேலும், மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருதனர்.
Comments
English summary
On the occassion of Mahalaya amavasai, in Ramreshwaram people paid homage to their late elders
Story first published: Tuesday, September 19, 2017, 15:30 [IST]