For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தியமங்கலத்தில் சோதனை - விதி மீறிய மூன்று லாரிகள் பறிமுதல்- வீடியோ

சத்தியமங்கலத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது விதியை மீறி அதிக சுமை ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலத்தில் போக்குவரத்துதுறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, விதிகளுக்கு புறம்பாக அதிக சுமை ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளை பறிமுதல் செய்தனர்.

கனரக லாரிகளில் அதிக சுமைகளை ஏற்றிச் செல்வதும் அவை விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிக சுமை ஏற்றி வந்த மூன்று லாரிகளை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அதுமட்டுமில்லாமல் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, புகைச் சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு அபாரதம் விதித்தனர். இனி இப்பகுதிகளில் அடிக்கடி வாகன சோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
In Sathyamangalam transport department officials done check up. And three lorries seized as they carried with lot of weight against the rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X