கிருஷ்ணகிரியில் தலித் வாலிபர் வாயில் சிறுநீர் கழித்த உயர் சாதி கும்பல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 20 வயது தலித் வாலிபரின் வாயில் உயர் சாதியினர் சிறுநீர் கழித்த அவலம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கருவனூரைச் சேர்ந்தவர் அரவிந்தன்(20). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அவர் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
கடந்த 2ம் தேதி அவரும், அவரது உறவினர் தினேஷும்(20) கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்த உயர் சாதியைச் சேர்ந்த சிலர் ஆத்திரம் அடைந்துள்ளனர். அந்த கும்பல் அரவிந்தன் மற்றும் தினேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர்களை தாக்கியுள்ளனர்.
இதில் அரவிந்தன் காயம் அடைந்து கீழே விழுந்தபோது தாகம், தாகம் என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் அரவிந்தனின் வாயில் சிறுநீரை கழித்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் போலீசார் தாக்குதல் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அரவிந்தனும், தினேஷும் சாதிப் பெயரால் மோசமாக நடத்தப்பட்டார்களாக என்பதை உறுதி செய்த பிறகு அந்த வழக்கை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் மாற்றுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.