For Daily Alerts
Just In
அன்னிய செலாவணி மோசடி வழக்கு: தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் கோர்ட் உத்தரவு!
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூன் 8ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது சென்னை எழும்பூரில் உள்ள கோர்ட்டில் 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரணை நடந்து வருகின்றன. இதற்காக தினகரன் கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டு வருகிறது.
ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனை வரும் ஜூன் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments
English summary
Egmore court order to DA that to make appear TTV.Dinakaran in the Forein exchange case.on june 8th he should appear.
Story first published: Friday, May 12, 2017, 11:58 [IST]