திருச்செந்தூர் கடலில் இறந்து மிதந்த ராட்சத திமிங்கலம்!
திருச்செந்தூர் கடல் பகுதியில் இறந்த நிலையில் ராட்சச திமிங்கலம் மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடலில் ராட்சத திமிங்கலம் இறந்து மிதந்ததால் அங்கு பரபரப்பு உருவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஜூவா நகர் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 1 கடல் மைல தொலைவில் ராட்சத திமிலங்கலம் ஒன்று இறந்து மிதந்ததைக் கண்டனர். இதுபற்றி உடனடியாக ஆலந்தலை கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, கடலோர காவல் படை எஸ்பி கோபி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த திமிலங்கலம் 20 அடி நீளமும், 2 டன் எடையுடன் இருந்தது. முதுகில் காயம் இருந்ததால் கப்பலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும் திமிங்கலம் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்திருக்க்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த திமிங்கலம் அதிக எடையுடன் இருந்ததால் கரைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் அதை கரைக்கு கொண்டு வருவதில் வனத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.