For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துயரம்.. விபத்தை விசாரிக்கச் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது வாகனம் மோதி பலி!

தாழையூத்தில் ஏற்பட்ட விபத்தை பார்வையிட்டு விசாரித்துக்கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் அகிலா மீது வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரிதாபம்! விசாரிக்க சென்ற இடத்தில் பலியான பெண் எஸ்.ஐ-வீடியோ

    நெல்லை: விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு, விசாரணையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது வாகனம் மோதி அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் காவல்நியைத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அகிலா. விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையதுக்குட்பட்ட தாழையூத்து பகுதியில் நேற்று இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக அகிலா அங்கு சென்றார்.

    In Thirunelveli Thalaiyuthu, sub inspector died in accident

    அவர் விசாரணை செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை விசாரிக்கச் சென்ற இடத்தில், சப் இஸ்பெக்டர் அகிலா இன்னொரு விபத்தால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    சப் இன்ஸ்பெட்கர் அகிலா, திசையன்விளையைச் சேர்ந்தவர். இவர் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இரு வருடங்களாக விக்கிரமசிங்கபுரத்தில் பணியாற்றி வந்தார்.

    English summary
    In Thirunelveli Thalaiyuthu when a sub inspector Akila, inquired about accident, a vehicle hit on her and she died there itself.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X