For Daily Alerts
Just In
நாளை பக்ரீத்: திருப்பூரில் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்- வீடியோ
திருப்பூரில் ஜாக் அமைப்பினர் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடத்தினர். அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Recommended Video
பக்ரீத் பண்டிகைக்கு சிறப்பு தொழுகை-வீடியோ
திருப்பூர்: திருப்பூரில் நாளை கொண்டாடப்படவிருக்கும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை கொண்டாடப்படுகிறது. அதற்கு தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூரில் ஜாக் அமைப்பினர் முன்கூட்டியே பக்ரீத் சிறப்பு தொழுகையை நடத்தினர். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்துகொண்டு சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர்.
ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.
பக்ரித் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஆடு வியாபாரம் சூடுபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
In September 2 worldwide Bakrid festival will be celebrated. In Tiruppur a group of muslims done special prayer for Bakrid