For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விருதுநகரில் அம்மன் தாலி கொள்ளை - பொதுமக்கள் பீதி!

விருதுநகர் அருகேயுள்ள முக்குளம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டுப் போனதால் பக்தர்கள் பீதியில் உள்ளனர்.

Google Oneindia Tamil News

விருதுநகர்:விருதுநகர், முக்குளம் அம்மன் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளைபோனதால்பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

விருதுநகர் முக்குளத்தில் திருமிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்-பாலகுருநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் நடை சாத்தப்பட்டது.

In Virudhunagar, Amman Mangal sutra looted

வழக்கம் போல் இன்று காலை நடைதிறப்புக்காக பூசாரி துரைராஜ் வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 3 பவுன் தாலி மற்றும் கோவிலில் இருந்த 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து பூசாரி துரைராஜ், முக்குளம் போலீசில் புகார் செய்தார். அதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் தாலி களவு போனதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

English summary
Near Virudhunagar, In Angala Parameshwari temple gold silver looted bu unknown persons. Police investigating the theft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X