For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு ஐடி நோட்டீஸ்... 6-ஆம் தேதி ஆஜராக உத்தரவு

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் பலகோடி மதிப்பிலான 10 பந்தயக் கார்களை பறிமுதல் செய்த வழக்கில் அவற்றின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கானத்தூர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான 10 சொகுசு கார்கள் குறித்து விளக்கம் கேட்டு அதன் உரிமையாளர்களுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரியில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நோக்கி 150 கி.மீ. வேகத்தில் 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஞாயிற்றுக்கிழமை சீறி பாய்ந்தன. அப்போது வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸார் அந்த கார்களை தடுக்க முயன்றனர். அதை மீறி நிற்காமல் போனதால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரராஜனின் கால் மீது லேசாக உரசியதில் அவர் காயம் அடைந்தார்.

Income Tax Dept has issued notice to race car's owners

தகவலறிந்த கானத்தூர் போலீஸார் அந்தக் கார்களை சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து 10 கார்களையும் பறிமுதல் செய்த போலீஸார் அதை ஓட்டியவர்களை கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கார் ரேஸ் நடத்தியவர்கள் ஸ்ரீசாத், விக்னேஸ்வரன், கிஷால், சங்கர், பிரசன்னா, ராகவேந்திரன், கரன், ராஜகோபால், எஸ்காணி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பெரும்புள்ளிகளின் மகன்கள் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கார்களின் வடிவமைப்பில் ஏதேனும் சட்டத் திட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொள்ள மோட்டார் வாகன ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. கானாத்தூர் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் அதிகாரிகளின் ஆய்வு முடிந்தது.

இதைத் தொடர்ந்து 10 கார்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீஸ் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் வேகமாக சென்ற வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்பதால் அவை குறித்து விளக்கம் கேட்டு அதன் உரிமையாளர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 6-ஆம் தேதி சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
On Sunday around 20 race cars were fastly driven on ECR Road, the police seized 10 cars. Now, IT Dept has issued notice to car owners since the cars cost many crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X