மீண்டும் வேட்டை… 10 இடங்களில் வருமானவரிச் சோதனை… சிக்கப் போவது எவ்வளவு கோடியோ?
தமிழகத்தில் நின்று போயிருந்த வருமானவரிச் சோதனை வேட்டை மீண்டும் தொடங்கியுள்ளது. 10 இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் 10 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் தொடங்கிய வருமானவரிச் சோதனையில் ஹை பவர் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் சேகர் ரெட்டி வீடும் அதனைத் தொடர்ந்து அவர்களது நண்பர்கள் வீடும் வருமானவரித் துறையினரின் சோதனைக்கு ஆளானது. இதில் திடுக்கிடும் வகையில் பணமும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது மகன், உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். இது தமிழகம் முழுவதும் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதற்குப் பிறகு வருமானவரித் சோதனைகள் எதுவும் பெரிய அளவில் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 'ஹை பவர்' உள்ளிட்ட 10 நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.