Breaking Live: தமிழகத்தில் சுதந்திர தின விழா.. கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் 72வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றி வைத்து தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கிப் பேசினார்.
தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகளையும் அவர் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக காவலர் அணிவகுப்பையும் முதல்வல் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றுவது இது 2வது முறையாகும்.
ஜாதி, மதம் மறந்து அனைவரும் வாழ்ந்து வருகின்றனர் - முதல்வர்
சென்னையில் இஸ்லாமிய பெண்கள் வசதிக்காக மகளிர் விடுதி கட்டப்படுகிறது- முதல்வர்
ஜெருசேலம் செல்லும் கிறிஸ்தவ பயணிகளின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்தப்படுகிறது - முதல்வர்
தமிழகத்தில் 2ம் பசுமைப் புரட்சியை எடுக்க நடவடிக்கை - முதல்வர் பேச்சு
உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளோம் - முதல்வர்
டெல்டா விவசாயிகள் நலனைப் பாதுகாக்க குறுவை திட்டம்- முதல்வர்
கூட்டுப் பண்ணை முறையை ஊக்குவிக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு - முதல்வர் உரை
தென் மேற்குப் பருவ மழை காரணமாக மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் - முதல்வர்
மழை வரவால் 2 முறை முழுக் கொள்ளளவை அணை எட்டியது - முதல்வர் எடப்பாடி
ஜெயலலிதா வழி வந்த அரசு அனைவருக்கும் கல்வி தருவதில் உறுதியாக உள்ளது - எடப்பாடி
பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - முதல்வர் பேச்சு
கோட்டைக் கொத்தளத்தில் உரை நிகழ்த்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami unfurls the tricolour in Chennai. #IndependenceDayIndia pic.twitter.com/dtH8BSDyvi
— ANI (@ANI) August 15, 2018