For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்கே.நகரில் மேள தாளத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்

ஆர்கே நகர் தொகுதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் மேளதாளத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மேளதாளத்துடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

காலியாக உள்ள ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Independent candidate was nominated today with the drums music in R.K.Nagar constituency

இந்நிலையில் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனுத்தாக்களைத் தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி வேட்பாளர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலரிடம் இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மேளம் தாளம் முழங்க ஊர்வலம்

மேள தாளம் முழங்க குடைபிடித்தப்படி ஊர்வலமாக வந்து அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. பல அரசியல் கட்சிகளுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கவுரப் பிரச்சனையாக உள்ளது.

Independent candidate was nominated today with the drums music in R.K.Nagar constituency

சாவுகாசமாக வேட்புமனுத்தாக்கல்

சிதறிக் கிடக்கும் வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் என அரசியல் கட்சியினர் யூகிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மேளதாளம் முழங்க சாவுகாசமாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In RK.Nagar constituency a independent candidate was nominated today with the drums music.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X