தமிழகத்தை ஏமாற்றிய இந்தியா.. இணையத்தை மிரட்டும் மக்கள்.. தேசிய அளவில் வைரலான ஹேஷ்டேக்!
தமிழகத்திற்கு இந்தியா துரோகம் செய்துவிட்டதாக டிவிட்டரில் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: தமிழகத்திற்கு இந்தியா துரோகம் செய்துவிட்டதாக டிவிட்டரில் தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்காக இந்தியா பிட்ரேய்ஸ் தமிழ்நாடு (#IndiaBetraysTamilnadu) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, சாகர் மாலா பிரச்சனை, நிதி ஒதுக்குவதில் குறைப்பாடு என நிறைய பிரச்சனைகள் குறித்து இதில் பேசி வருகிறார்கள்.
இந்த ஹேஷ்டேக் இணையம் முழுக்க அதிகம் விவாதிக்கப்பட்டதால் தேசிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இதில் இன்னும் அதிகம் விவாதிக்கப்பட்டால் உலக அளவில் டிரெண்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது.
|
சுங்க சாவடி
காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தில் விழுப்புரம் சுங்க சாவடி தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
|
யாருக்கும் யாருக்கும்
இவர் ''இது வட இந்தியா, தென்னிந்தியா பிரச்சனைஇல்லை, கர்நாடகா தமிழ்நாடு பிரச்சனை இல்லை, இது நீதிக்கும் அநீதிக்குமான பிரச்சனை, சரிக்கும் தவருக்குமான சண்டை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
மோடிக்கு கடிதம்
இவர் ''ஹலோ மோடி, நீங்கள் ஒருவேளை மறந்து இருந்தால் இப்போது நியாபகப்படுத்துகிறேன். தமிழ்நாடு ஒன்றும் அண்டை நாடு கிடையாது. நாங்கள் இந்தியாவில்தான் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
|
கோபம்
இவர் ''இந்தியா என்று எங்களை கைவிடுகிறதோ அன்று நாங்கள் இந்தியாவை கைவிடுவோம '' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
|
தமிழக வளம்
இவர் ''நெய்வேலி நிலக்கரி இந்தியா முழுமைக்கும் வேண்டும். கூடங்குளம் மின்சாரம் இந்தியா முழுமைக்கும் வேண்டும். மீத்தேன் எடுத்தால் அதுவும் இந்தியா முழுமைக்கும். தமிழகத்தின் எல்லா வளமும் இந்தியா முழுமைக்கும் வேண்டும். ஆனால் காவிரி மட்டும் தமிழ்நாட்டிற்கு கிடையாதா?'' என்றுள்ளார்.