12ம் தேதி கொழும்பில் இந்தியா-இலங்கை மீனவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: வரும் 12ம் தேதி இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே கடந்த ஜனவரி மாதம் சென்னையில் வைத்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து மார்ச் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் அது 2 முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் 12ம் தேதி இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. இந்த தகவலை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடந்த பிறகு இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று ரஜிதா மேலும் தெரிவித்தார்.