'இந்தியன் 2' விபத்து... கிரேன் ஆப்ரேட்டர் கைது! கமல், ஷங்கருக்கு சம்மன்! போலீஸ் முடிவு!
Recommended Video
சென்னை: 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்த படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு 19.2.2020-ம் தேதி அன்று இரவு 9 மணியளவில் நடந்தது. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது.
அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர். கிரேன் பாராம் தாங்காமல் விழுந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரகிறார்கள். விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தலா ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று நேற்று அறிவித்தார். படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.